சாலையில் கொப்பளிக்கும் சாக்கடை.. முகம் சுளிக்க வைக்கும் காட்சி..

x

கனமழை காரணமாக வேலூர் பச்சையப்பா சில்க்ஸ் அருகே வேலூர் காட்பாடி சாலையில் பாதாள சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கால்வாயின் மூடிகளின் வழியாக கழிவுநீர் குபுகுபுவென வெளியேறியது.

இதேபோல வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், ஆரணி சாலையில் மழைநீருடன் கழிவு நீர் தேங்கியது.


Next Story

மேலும் செய்திகள்