அடிக்கும் வெயிலிலும் வேளச்சேரி மேம்பாலத்தில் நிற்கும் 1000 கார்கள் - ஓனர்கள் சொல்லும் காரணம்

x

அடிக்கும் வெயிலிலும் வேளச்சேரி மேம்பாலத்தில் நிற்கும் 1000 கார்கள் - ஓனர்கள் சொல்லும் காரணம்

சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் 4வது நாளாக தொடர்ந்து கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன... கனமழை எச்சரிக்கையால் 100 அடி சாலையில் உள்ள ஈரடுக்கு புதிய பாலத்தில் இருபுறமும் 600க்கும் மேற்பட்ட கார்களும், பழைய ரயில்வே பாலத்தில் 400க்கும் மேற்பட்ட கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன... மேலும் பாலத்தில் இடம் இல்லாமல் வேளச்சேரியில் இருந்து தரமணி செல்லும் 100 அடி சாலையில் நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்தன. மழை நின்ற பிறகும் 4வது நாளாக இன்றும் கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதும் கடந்த 3 நாள்களை ஒப்பிடும் போது இன்று பாதியாக குறைந்துள்ளது. அடுத்த மழைக்கும் இந்த மேம்பாலத்திலேயே கார்களை நிறுத்தும் பட்சத்தில் காவல் துறை அபராதம் விதிக்க கூடாது என கார் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்