மக்களே..! காய்கறி விலையில் திடீர் மாற்றம்... வெளியான இன்ப செய்தி | Vegetable

x

தமிழகத்தில் தொடர் கன மழையினால் கடந்த வாரம்

காய்கறி விலைகள் உயர்ந்த நிலையில் , தற்போது வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளன.

சென்னை, கோயம்பேடு சந்தையில், வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை, கடந்த மூன்று நாட்களாக குறைந்துள்ளன.

ஒரு கிலோ தக்காளி 30 முதல் 50 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 40 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனையாகின்றன.

ஒரு கிலோ பீட்ரூட் 50 முதல் 60 ரூபாய்க்கும், பீன்ஸ் 130 முதல் 160 ரூபாய்க்கும்,

ஒரு கிலோ வெண்டைக்காய் 25 முதல் 30 ரூபாய்க்கும், பாவக்காய் 40 முதல் 45 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒரு கிலோ முருங்கைக்காய் 50 முதல் 60 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 60 முதல் 80 ரூபாய்க்கும்,

மாங்காய் 30 முதல் 40 ரூபாய்க்கும், தேங்காய் 46 முதல் 48 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.


Next Story

மேலும் செய்திகள்