ஒரே நாளில் இடியை இறக்கிய தக்காளி விலை - அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

x
  • சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் தக்காளி விலை 15 ரூபாய் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக இன்று ஒரே நாளில் தக்காளி விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. மொத்த கொள்முதலில் ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய் அதிகரித்து 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
  • ஒரு கிலோ பெரிய வெங்காயம் 55 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 110 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தேவை அதிகமாக உள்ள சூழலில் வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்