சாலையில் குறுக்கே புகுந்த மாடு.. தலைகீழாக கவிழ்ந்த சுற்றுலா வேன்.. 15 பேருக்கு நேர்ந்த சோகம்

x

நெல்லையில் மாடு குறுக்கே புகுந்ததால், சுற்றுலா வேன் தலைகீழாக கவிழ்ந்தது.

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வேனில் 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். நெல்லை மாவட்டம் டக்கரம்மாள் புரத்திற்கு சுற்றுலா வேன் வரும் போது, சாலையின் குறுக்கே மாடு புகுந்தது. இதனால், வேனானது கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்