"ஒரே சத்தம் டிரஸ் எல்லாம் ரத்தம்" புதருக்குள்ள கொண்டுபோய்...பார்த்தவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்

x

வால்பாறை அருகே ஊசிமலை மட்டம் எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி நசீரான் கதும், தனது நான்கு வயது குழந்தை அப்சராவுடன் குடியிருப்புக்கு அருகிலுள்ள தேயிலை தோட்ட பகுதியில் கீரை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை, சிறுமியை இழுத்துச் சென்றது. இதில் சிறுமி உயிரிழந்த நிலையில், வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். வால்பாறை வனச்சரக அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் 15 பேர் கொண்ட வனக் குழுவினர் 6 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் கிராம மக்கள் சோகமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்