எமர்ஜென்சி வார்டுக்குள் காரில் சென்ற போலீசார்.. வெளியான அதிர வைக்கும் காரணம்

x

உத்தரகாண்ட் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிய சதீஷ்குமார் என்பவர் பெண் மருத்துவரை பாலியல் சீண்டல் செய்ததாகவும், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சதீஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மருத்துவமனையில் போராட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் சதீஷ்குமாரை கைது செய்ய மருத்துவமனைக்கு சென்ற போலீசார், காரை அவசர வார்டுக்குள்ளேயே ஓட்டிச் சென்றிருக்கிறார்கள்.. இருபுறமும் நோயாளிகள் படுத்திருக்க கார் உள்ளே செல்வதற்காக வழியையும் ஒதுக்கியிருக்கிறார்கள். நோயாளிகள் இருக்கும் ஸ்ட்ரெச்சர் மற்றும் கட்டில்கள் என்றும் பாராமல் அவைகளை தள்ளிவிட்டு போலீசார் வழியை ஏற்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்