20-க்கும் மேற்பட்டோர் கூண்டோடு ராஜினாமா..அமைச்சர் உதயநிதி இல்லத்திற்கே வந்து கடிதம்..பெரும் பரபரப்பு

x

காஞ்சிபுரம் மேயரை மாற்றக் கூறி கவுன்சிலர்கள் அண்ணா அறிவாலயத்திலும் உதயநிதி ஸ்டாலின் இடமும் புகார் மனு அளித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மேயர் பொது மக்களுக்கு செய்ய வேண்டிய எந்த ஒரு பணிகளையும் செய்யாமல் இருந்து வருவதாகவும், பல்வேறு முறைகேடுகள் மற்றும் லஞ்சம் பெறுவதாகவும், ‌கணவரை வைத்து பணிகள் மேற்கொண்டு வருவதாகவும்

கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அமைச்சர்களிடம் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் 20க்கும் மேற்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் ராஜினாமா கடிதத்துடன் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு வருகை தந்து மனு அளித்தனர். பிறகு அண்ணா அறிவாலயத்தில்

அமைப்புச் செயலாளர் அன்பகம் கலையிடம் அவர்கள் புகார் மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்