வறுமையில் வாடியும் கேட்டதும் கொடுத்த தம்பதி.. எதையும் யோசிக்காமல் கைமாறு செய்த விஜய்

x

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. மாநாடு நடத்த சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தை ராதாகிருஷ்ணன் - ராஜாமணி தம்பதி வழங்கி உள்ளனர். இந்த வயதான தம்பதி வறுமையால் தவித்து வந்த நிலையில் அவர்களுக்கு தவெக நிர்வாகி திருவள்ளூரைச் சேர்ந்த எம்.டி மணி என்பவர் 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாசு மாடு மற்றும் கன்றுடன் வாங்கி கொடுத்துள்ளார். அதனை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் மாநாடு நடைபெறும் இடத்தில் வயதான தம்பதியினரிடம் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்