தவெக மாநாடு - அய்யனாருக்கு யாகம் வளர்த்து வேண்டுகோள் விடுத்த கிராம மக்கள்

x

தவெக மாநாடு - அய்யனாருக்கு யாகம் வளர்த்து வேண்டுகோள் விடுத்த கிராம மக்கள்

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் வி.சாலை பகுதியில் 3 நாட்களுக்கு மழையே பெய்யக்கூடாது என கிராம மக்கள் யாகம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதற்கிடையே, வடகிழக்கு பருவமழை தொடங்கிய உள்ளதால், மாநாடு நடைபெறும் 27-ஆம் தேதிக்கு முன்னதாக 25, 26, 27 ஆகிய தேதிகளில் தங்கள் ஊரில் மழையே பெய்யக் கூடாது என வி.சாலை கிராம மக்கள், அங்குள்ள ஏரிக்கரையில் உள்ள ஐயனாரப்பன் கோயிலில் யாகம் வளர்த்தி வேண்டுகோள் விடுத்தனர். இதுமட்டுமன்றி, மாநாட்டிற்காக தங்கள் ஊருக்கு வரும் தொண்டர்கள், நல்லபடியாக திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்