எஸ்.பி.க்கு மிரட்டல் விட்ட சிறுவன்... பெற்றோருக்கும் சேர்த்து பாடம் புகட்டிய போலீசார்

x

சமூக வலைதளத்தில் திருச்சி எஸ்.பிக்கு மிரட்டல் விடுத்த புகாரில் சிக்கிய சிறுவனை நேரில் அழைத்து எஸ்.பி. வருண்குமார் அறிவுரை வழங்கினார். திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் மற்றும் அவரது மனைவியை கடுமையாக விமர்சித்த புகாரில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களோடு, 15 வயது சிறுவனும் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட சிறுவனை, எஸ்.பி. அலுவலகத்திற்கு வரவழைத்த காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சிறுவனுக்கும், அவரது தாயாருக்கும் அறிவுரைகளை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்