குடித்து கொண்டே இருந்தவருக்கு நேர்ந்த சோகம்... கிட்டவே நெருங்க முடியாத படி அழுகிய உடல்

x

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே, சாலையோர கழிவுநீரில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்த நிலையில், இறந்தவர் அத்தானி கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பது தெரியவந்தது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி எந்த வேலையும் செய்யாமல் இருந்த முருகானந்தம், கடந்த சில மாதங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற முருகானந்தம், திரும்பி வராத நிலையில் சடலமாக மீட்கப்பட்டதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த போலீசார், முருகானந்தம் மது போதையில் தவறி விழுந்து இறந்தாரா? விபத்தினால் இறந்தாரா? அல்லது வேறு எதும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்