தலையின் உச்சிக்கு ஏறிய போதை..ஆத்திரம் தீர இளைஞர் செய்த செயல்...அரண்ட போலீசார்...

x

திருச்சி திருவானைக்காவல் செக்போஸ்ட் டாஸ்மாக் மதுபானகடை அருகே போதையில் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். திருவானைக்காவல் செக்போஸ்ட் பகுதியில் இளைஞர் விக்sனேஷ் பிரியாணி கடை நடத்திவந்தார். மதுபான கடை இருந்ததால் இரவு நேரங்களில் அவரது கடைக்கு வாடிக்கையாளர் வருகை அதிகரித்தது. வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி ஸ்ரீரங்கம் போலீசார் கடையை அப்புறப்படுத்தினர். இதனால் வருமானத்தை இழந்த இளைஞர் விக்னேஷ், மது அருந்திவிட்டு போதையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை ஆத்திரம் தீர அடித்து உடைத்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்