கோவில் மணியால் வந்த பதற்றம் குவிக்கபட்ட போலீஸ் திருச்சியை பரபரப்பாக்கிய சம்பவம்

x

திருச்சி மாவட்டம் முசிறி அருகே, கோவில் முன்பு வைக்கப்பட்ட மணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டது. பிள்ளாபாளையம் கிராமத்தில் மதுரைவீரன் சுவாமி கோவில் முன்பு, ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இரும்பு தூண்கள் அமைத்து அதில் மணி கட்டி தொங்க விட்டுள்ளனர். மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மணி மற்றும் இரும்புக் தூண்களை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிலையில் கோவில் முன்பு வைக்கப்பட்ட மணியை, வருவாய் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். அப்போது ஒருதரப்பினர் மட்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்