திருச்சி மலைக்கோட்டை கோயிலில் அதிர்ச்சி.. வயிற்றை குமட்டிய வாடை.. மூக்கை பொத்திய பக்தர்கள்

x

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் குடிநீர் டேங்க் தண்ணீர் வெளியேறி கழிவுநீர் செல்லும் வாய்க்கால் வழியாக வெளியேற்றப்பட்டது.

இதனால் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீரும் குடிநீரும் ஒன்றாக கலந்து மலைக்கோட்டை தாயுமானசாமி கோவில் பிரகாரம் முழுவதும் கழிவுநீர் சூழ்ந்து காணப்பட்டது.

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் சன்னதியில் சாக்கடை நீர் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டதால் சன்னதிக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் துர்நாற்றம் வீசியதால் மலைக்கோட்டை தாயுமான சுவாமி மற்றும் உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க செல்லும் பக்தர்கள் மற்றும் மலைக்கோட்டை மாடவீதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்


Next Story

மேலும் செய்திகள்