அதிரடியாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி.. வெளியான பகீர் பின்னணி

x

மணப்பாறையை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த திரிஷா என்பவரும் கல்லூரியில் படித்து வரும் சூழ்நிலையில், கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும், கடந்த 14-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, மதுரை அருகே உள்ள இலுப்பைக்குளத்தில் தங்கியிருந்தனர். இதை அறிந்த பெண்ணின் உறவினரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான அருணகிரி உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து, அவர்களை வலுக்கட்டாயமாக காரில் அழைத்து வந்தனர். அதன் பிறகு சந்தோஷிடம் இருந்த 20 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்து, அவரை சரமாரியாகத் தாக்கி பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் காயமடைந்த சந்தோஷ், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அளித்த புகாரின் பேரில் அருணகிரி உள்ளிட்ட 3 பேரை வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்