நெருங்கும் தீபாவளி... திருச்சியில் ஜவுளி உற்பத்தி மும்முரம் | Trichy | diwali

x

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது.மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கென விதவிதமான ஆடைகள் தயாரிக்கப்பட்டு, தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு ஜவுளி உற்பத்தி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், பொருட்களை அனுப்பவும், வாங்கி வருவதற்கும், முறையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பல குடும்பங்கள் ஜவுளித் தொழிலையே நம்பியுள்ள சூழலில், இந்த ஆண்டு தீபாவளி ஆர்டர்கள் அதிகமாக உள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்