புரட்டாசி 2வது சனிக்கிழமையில் பரிதாபம்.. மலையேறிய 70 திருச்சி பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்

x

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, சாமி தரிசனத்திற்காக மலை ஏறிய 70க்கும் மேற்பட்ட பக்தர்களை தேனீக்கள் தாக்கின. துறையூர் அருகே உள்ள பெருமாள் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், புரட்டாசி மாத 2வது சனிக்கிழமையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் மலை ஏறினர். பக்தர்கள் 2வது மண்டபத்தை அடைந்த போது, அங்கு தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் பக்தர்களை தாக்கியது. இதில், 70-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்