"செக்மேட்" - திருச்சி கலெக்டரையே தோற்கடித்து மிரளவிட்ட பிளஸ் 2 மாணவி | chess | collector

x

திருச்சியில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் நடந்த சதுரங்க போட்டியில் ஆட்சியரைத் தோற்கடித்து அசத்தினார் பள்ளி மாணவி ஒருவர்... மேற்கு ஒன்றிய அளவிலான பள்ளி மாணவிகளுக்கான சதுரங்க போட்டியினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்... தொடர்ந்து அவர் 12ம் வகுப்பு மாணவி அக்‌ஷராவுடன் செஸ் விளையாடிய நிலையில், தொடர் காய் நகர்த்தலுக்கு பின்னர் அபாரமாக விளையாடிய அக்ஷரா ஆட்சியரை தோற்கடித்தார்... அவருக்கு ஆட்சியரும் ஆசிரியர்களும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்