"சவாரிக்கு போனாலே அடிச்சு துரத்துறாங்க" கதறும் ஆட்டோ ஓட்டுநர்கள்

x

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், புதிதாக திறக்கப்பட்டுள்ள விமான நிலைய முனையத்திற்கு ஆட்டோக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் திருச்சி- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பயணிகள் நடந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்