தமிழகத்தை அதிரவைத்த ரயில் விபத்து - பிளாட்பார்ம் அருகே துணி துவைத்து குளித்த பயணிகள்

x
  • ரயில்கள் ரத்தானதால், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள், நடைமேடை அருகிலேயே துணி துவைத்து குளித்தனர். கவரைப்பேட்டை அருகே பாக்மதி விரைவு ரயில் விபத்துக்கு உள்ளானதால், அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய சில ரயில்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. அவர்களில் சிலர், ரயில்களுக்கு தண்ணீர் நிரப்புவதற்காக நடைமேடை அருகே பொருத்தப்பட்டிருக்கும் தண்ணீர் குழாயில் குளித்து, அங்கேயே துணி துவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்