கோடை, வார விடுமுறை.. சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்

x

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர். குடும்பம் குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள், மோயர் ச‌துக்க‌ம், குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை, பைன் ம‌ர‌க்காடுக‌ள் உள்ளிட்ட சுற்றுலா த‌ளங்களை கண்டு ரசித்தனர்.

காரைக்கால் கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் கடலில் குளித்தும், பூங்காக்களில் விளையாடியும் மகிழ்ந்தனர். இதனால், காரைக்கால் கடற்கரை விழாக்கோலம் பூண்டது.

இதேபோல், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் அணையில் குளித்தும், பூங்காவில் விளையாடியும் விடுமுறையை கழித்தனர்.

குமரியின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய நிலையில், குடும்பம் குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள், குழந்தைகளுடன் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்