எதிராக திரும்பிய சுங்கச்சாவடி ஊழியர்கள்... தூக்கப்பட்ட டோல் - எல்லா வண்டிகளுக்கும் ஃப்ரீ

x

எதிராக திரும்பிய சுங்கச்சாவடி ஊழியர்கள்... தூக்கப்பட்ட டோல் - எல்லா வண்டிகளுக்கும் ஃப்ரீ

புதுக்கோட்டையில் தீபாவளி போனஸ் வழங்க‌க்கோரி, சுங்க‌க் கட்டணம் வசூலிக்காமல் ஊழியர்கள் வேலை நிறுத்த‌த்தில் ஈடுபட்டுள்ளதால், கட்டணம் செலுத்தாமல் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கில் சுங்கச்சாவடி இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படாமல், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த‌து. இதனால் அதிருப்தி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள், சுங்க‌க் கட்டணம் வசூல் செய்யாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, சுங்கச் சாவடி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்கின்றனர். வாகனங்களை நிறுத்துவதற்கான தடுப்புகள் திறந்து விடப்பட்டுள்ளதால், வாகன நெரிசல் இன்றி, உடனுக்குடன் கடந்து செல்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்