22 கி.மீ.க்கு இடையே டோல்கேட்டா? - குமுறும் வாகன ஓட்டிகள்

x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சுற்றி, விதிகளை மீறி 40 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 3 சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதால், கடும் அவதிக்கு உள்ளாவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்தனர். தேசிய நெடுஞ்சாலை விதிப்படி 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு சுங்கச்சாவடி இருக்க வேண்டும். ஆனால், செங்குறிச்சி சுங்கசாவடியில் இருந்து 39 கிலோ மீட்டர் தொலைவில் வீரசோழபுரத்திலும், அங்கிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் நத்தகரையிலும், அங்கிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்குப்பம் சுங்கச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, விதிகளை மீறி உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்