எதிர்பாராமல் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த மழை.. குளுகுளுவென மாறிய தமிழ்நாடு..!

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி கனமழை கொட்டித் தீர்த்தது. முத்தனம்பட்டி, கோவில்பட்டி, வைகை அணை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கிழுமத்தூர், கீழப்பெரம்பலூர், ஒகளூர், கீரனூர், பெருமத்தூர், எழுமூர், வேப்பூர், கிளியூர், அத்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. செவிலிமேடு, ஓரிக்கை, நத்தப்பேட்டை, குருவிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை வெளுத்து வாங்கியது. குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்