கண்மாய் உடைந்து குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம் - தண்ணீரில் மிதக்கும் வீடுகள்

x

கண்மாய் உடைந்து குடியிருப்பை சூழ்ந்த வெள்ளம் - தண்ணீரில் மிதக்கும் வீடுகள்


கனமழை காரணமாக, கரிசல்குளம், விளாங்குடி கண்மாய் நிரம்பி வழிகிறது. அதிலிருந்து வெளியேறும் தண்ணீர், குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ளது. அங்கன்வாடி மையம் உள்பட சுமார் 300 வீடுகளுக்குள் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் புகுந்தது. தண்ணீரில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் தென்படுவதால் வெளியே வரவே பயமாக இருப்பதாக கூறும் மக்கள், ஒவ்வொரு முறையும் மழைக்காலத்தில் இதேபோல் அவதியுறுவதாக வேதனை தெரிவித்தனர். பாதிப்பை பார்வையிடும் அதிகாரிகள், எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனக் குற்றம்சாட்டிய மக்கள், ஓடையை தூர்வாரி அகலப்படுத்தினால், குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் வராது என தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்