குழந்தையோடு தவித்த பெண், காத்திருந்த மக்கள்... MTC கொடுத்த இன்ப அதிர்ச்சி | MTC

x

சென்னையில் கொட்டிய கனமழை காரணமாக விமான நிலையத்தில், பயணிகளை ஏற்றிச் செல்ல ஓலா, உபேர், ரபிடோ வாடகை வாகனங்கள் கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்தன. இதனையடுத்து விமான நிலையம் வழியாக செல்லும் பேருந்துகள், விமானங்கள் வருகை நேரத்தை பொருத்து விமான நிலையத்திற்குள் சென்றுவர ஏற்பாடு செய்யப்பட்டது. விமான நிலையத்திற்கு அரசு பேருந்து சேவை வியாழக்கிழமையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் வாடகை வாகனங்கள் கிடைக்காத வேளையில்... அரசு பேருந்துகள் வந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது, மழைகாலத்தில் அரசின் சேவை பயனுள்ளது என காத்திருந்த பயணிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்