TNPSC குரூப் 2, 2A தேர்வில் பாஸாகி நேர்காணல் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

TNPSC குரூப் 2, 2A தேர்வில் பாஸாகி நேர்காணல் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

டிஎன்பிஎஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குரூப் 2, 2A தேர்வர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2022ம் ஆண்டு தமிழக அரசின் 67 துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு, நேற்று நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதற்காக டிஎன்பிஎஸ்சி அலுவலக வாசலில் ஏராளமான தேர்வர்கள் காத்திருந்த நிலையில், பலர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படவுள்ளதால், வரிசைப்பட்டியலில் பின்தங்கியவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தேர்வு முடிவுகளை வெளியிட, டி.என்.பி.எஸ்.சி இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக்கொள்கிறது என்றும் இதனால் தேர்வர்கள் பலர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்