குமரி எக்ஸ்பிரஸிலிருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்ட TNPSC தேர்வர்கள்..? அதிர்ச்சி சம்பவம்

x

கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டிகளில், முன் பதிவு பெறாதவர்கள் ஏறியதால் பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயில் நடு வழியில் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று குரூப்-4 தேர்வு நடைபெறுவதால் இதுபோல் கூட்டம் ஏறியதாக அரியலூர் ரயில் நிலைய மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், முன்பதிவு செய்யாமல் ஏறியவர்கள் முன்பதிவு பெட்டிகளில் இருந்து இறக்கி விடப்பட்ட நிலையில், அதில் 20 பேரை ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயிலிலும், தொடர்ந்து மீதி உள்ளவர்களை நாகர்கோவில் விரைவு ரயிலிலும் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஏற்றி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்