``பட்டப்படிப்பு செல்லாது..'' குரூப் 2 ஏ தேர்வானவர்களுக்கு இடியை இறக்கிய TNPSC..!

x

குரூப் 2 ஏ பிரிவில் பணி நியமன கடிதம் பெற்ற 200-க்கும் அதிகமானோரின் பட்டப்படிப்பு செல்லாது என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரூப் 2 ஏ பிரிவில், இளநிலை உதவி தணிக்கையாளர் பதவிக்கு, தேர்வுகள் வைக்கப்பட்டு, தகுதியானவர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி பணியில் சேர நியமன கடிதம் வழங்கப்பட்டது. இந்நிலையில், பி.காம் பட்டப்படிப்பில் அக்கவுண்டிங் அண்ட் பைனான்ஸ் உட்பட சில பாடப்பிரிவுகள், பட்டப்படிப்பிற்கு இணையாக அரசாணையில் அறிவிக்கப்படவில்லை. இதனால், அந்த பாடப்பிரிவுகளில் பயின்றவர்கள், அரசால் அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவுக்கு இணையானது என்ற சான்றிதழை பெற்று வர வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி கடிதம் அனுப்பியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்