TNPSC குரூப் 2, 2A தேர்வு 2,327 காலி பணியிடங்களுக்கு.. அதிர்ச்சியூட்டும் ஒரு தகவல்

x

தமிழக அரசின் குரூப்-2, 2-ஏ பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

துணை வணிகவரி அலுவலர், உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர், சிறப்பு உதவியாளர் உள்ளிட்ட 2 ஆயிரத்து 327 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-2, 2-ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஜூலை 19ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக ஒரு நாள் அவகாசம் வழங்கப்பட்டு ஜூலை 20ம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றது.

இந்நிலையில், இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 90 ஆயிரத்து 376 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

குரூப்2, 2-ஏ நிலை தேர்வுகள் செப்டம்பர் 14 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் குரூப் 2 தேர்வின் மூலம் 507 பேரும், குரூப் 2-ஏ தேர்வு மூலம் 1820 பேரும் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்