கழுத்தை நெரித்த களவாணி- திரண்ட அக்கம்பக்கத்தினர்... உயிரை காப்பது போல் `திருட்டு சைக்கோ' ஆக்டிங்

x

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் முதியவரை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற திருடன், அக்கம்பக்கத்தினர் வந்ததும் முதியவரை காப்பாற்றுவது போல் நடித்துள்ளார்.

கொலப்பள்ளி பகுதியை சேர்ந்த 86 வயது முதியவர் சாமி முத்து. இவரது இரண்டு பிள்ளைகளும் வெளிநாட்டில் உள்ளதால், சாமி முத்துவும் அவரது மனைவியும் வீட்டில் தனியாக வசித்துள்ளனர். இந்நிலையில், இவர்களது வீட்டிற்குள் புகுந்த திருடன், இருவரையும் தாக்கிவிட்டு கொள்ளையடிக்க முயன்றான். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தபோது, முதியவரின் கழுத்தை திருடன் நெறித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அக்கம்பக்கத்தினர் வீடியோ எடுக்க முயன்றனர். கேமராவை பார்த்ததும், திருடன் நாடகமாட தொடங்கினான்.


Next Story

மேலும் செய்திகள்