வரதட்சணை கொடுமை..! தலைமறைவாக இருந்த நபரை தட்டி தூக்கிய போலீஸ் | TN Police

x

வரதட்சணை புகாரில் தேடப்பட்டு வந்த கோவை நபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் துபாய் செல்லவிருந்த பயணிகளை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கோவையை சேர்ந்த முத்துச்சாமி என்பவரின் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவர் கடந்தாண்டு முதல் வரதட்சனை கொடுமை வழக்கில் தேடப்படும் நபர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவை மாவட்ட போலீசார் அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதையடுத்து முத்துச்சாமியை, சென்னை விமான நிலைய போலீசாரிடம் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்