13 காவல் அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | TN Police

x

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் என 13 அதிகாரிகள் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடுக்கல், வாங்கல் விவகார வழக்கில்,

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது

நான்கு காவல் துணை ஆணையர், மூன்று உதவி ஆணையர் மற்றும் ஆறு ஆய்வாளர்களின் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. நான்கு ஆண்டுகளாக புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பணியிட மாற்றத்தை காரணமாக கூறி, அதிகாரிகள் தப்பிக்க முடியாது என நீதிபதி கூறினார். காவல்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல் இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் என 13 அதிகாரிகள் நவம்பர் 5ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்