`கன் பாயிண்ட்டில்' சிக்கிய சி.டி.மணி... இறங்கிய `கூரான நங்கூரம்'... சம்பவம் செய்த போலீசார்

x

15 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கூறி கைதான பிரபல ரவுடி சி.டி மணி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தென் சென்னையின் பிரபல ரவுடியான சி.டி.மணி சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் 15 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக கூறி நீலாங்கரை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும் கைதின் போது போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற சி.டி மணி, கீழே விழுந்த கால் எலும்பை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சி.டி.மணியை, வருகின்ற 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்