தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு - தமிழக அரசு உத்தரவு

x

தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு - தமிழக அரசு உத்தரவு


உள்ளாட்சிகள் தினத்தை ஒட்டி நவம்பர் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் ஒன்றாம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஒத்தி வைத்துள்ளது. உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டமானது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுவதாகவும், கிராம சபை கூட்டம் நடத்த வேண்டிய நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் இயக்குனர் பொன்னையா அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்