அரசுப் பேருந்துகளில்... சூப்பர் பிளானோடு இறங்கும் போக்குவரத்து கழகம் | TN Govt Bus

x

தமிழ்நாடு போக்குவரத்து கழகமானது, பொருள் போக்குவரத்தில் நுழைய திட்டமிட்டு, அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த திட்டத்தை, அரசுப் போக்குவரத்து பணிமனைகளில் பொருள்களை சேமித்து வைத்து, பொது-தனியார் கூட்டுத் திட்ட முறைமையில் அமல்படுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய, ஆலோசகரை நியமித்து, பின்னர் ஆர்வமுள்ள நிறுவனங்கள் இதில் பங்கேற்பதற்கான வழிவகைகளும் செய்யப்படவுள்ளன.பொருள் போக்குவரத்துத் தொழிலைச் செய்ய, அரசு பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு நிறுவனத்தை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் புதிய வருவாய் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, நீண்ட காலப் பொதுப் போக்குவரத்து சேவைகளை நிலை பெறச்செய்யவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்