தி.நகர் கடைகளில் திடீர் ரெய்டு.. "பொய் பேசாதீங்க.. சீல் வச்சிடுவேன்" - கொதித்த அதிகாரிகள்

x

சென்னை தியாகராயநகரில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், பெட்டிகடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

தியாகராயநகரில் உள்ள பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான குழு, அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெட்டிக்கடைகளில் பதுக்கி வைத்து விற்கப்பட்ட குல் லீப், ஹான்ஸ், சைனி கைனி மற்றும் பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பெட்டிக்கடை வியாபாரிகளுக்கு அபராதம் விதித்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, எச்சரிக்கை செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்