எமனாக வந்த வாகனம்...ஸ்பாட்டில் பிரிந்த 3 உயிர்கள் - ஆரணி பைபாஸில் அதிர்ச்சி

x

ஆரணி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் அரியப்பாடி கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ், தனது நண்பர்களான ராஜேஷ் மற்றும் மணிகண்டனுடன் 2 சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆரணி பைபாஸ் சாலையில் சென்ற போது அவர்கள் சென்ற பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. அதில் 3 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்