தி.மலையை பரபரப்பாக்கிய சம்பவம்... ஏமாந்தவருமே போய் வாண்ட்டடாக கும்பல்... வெளியான பகீர் தகவல்

x

நாமக்கல்லை சேர்ந்தவர் சீனிவாசன். இவரிடம் தங்கப் புதையல் இருப்பதாக கூறி, சுமார் 4 லட்ச ரூபாய்க்கு போலி தங்க நாணயங்களை விற்று ஏமாற்றி இருக்கின்றனர். புகாரின் அடிப்படையில், இது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கடந்த 3 நாள்களுக்கு முன்பு மீண்டும் அதே கும்பல் சீனிவாசனை தொடர்பு கொண்டு, இரண்டரை கிலோ தங்க நகை இருப்பதாகவும், 36 லட்ச ரூபாய் கொடுத்தால் பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறி வலை விரித்திருக்கின்றனர். இதனை போலீசாரிடம் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து நாசுக்காக பேசி, திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் பைபாஸ் சாலைக்கு கும்பலை சீனிவாசன் வரவழைத்த நிலையில், மோசடி கும்பலை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதில், ஒரு பெண் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். கைதான ஆறு பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பியோடிய இருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்