ஷேர் ஆட்டோவில் பெண்ணுக்கு வந்த ஆபத்து.. கூச்சலை கேட்டு மடக்கிய மக்கள்.. இருவருக்கு விழுந்த தர்ம அடி.. தி.மலையில் பரபரப்பு

x

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்துர் பகுதியிலிருந்து பல ஊர்களுக்கு ஷேர் ஆட்டோ இயக்கப்பட்டு வருகின்றன. சம்பத்தன்று ஷேர் ஆட்டோவில் வசந்தி என்ற பெண் பயணித்து இருக்கிறார்.அப்போது ஆள் நடமாட்டமற்ற பகுதியில் ஆட்டோ சென்ற போது உடன் இருந்த இருவர் வசந்தியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதால் கூச்சல் போட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கூடி இருவரைப் பிடித்து அருகில் உள்ள கீழ்பென்னத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.அப்போது காவல் நிலையத்தில் போதிய போலீஸ் இல்லை எனக் கூறி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பக் கூறியுள்ளனர். இதனால் பொது மக்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர். ஆனால் ரவுடிகளை போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் அழைத்துச் செல்ல முடியாது என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறியதால் வேறு வழியின்றி போலீசாரும் உடன் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்