இந்த ஒரு சின்ன விஷயம் தான்..!போலீசார் கண்முன்னே விழுந்த கத்திக்குத்து | Tiruvannamalai | Police

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்பட்டு வரும் நிலையில் கிரிவலப் பாதையில் பல்வேறு இடங்களில் சாமியார்கள் ஆங்காங்கே தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்... இந்நிலையில் நேற்று இரவு கோயில் அருகே படுத்து உறங்கிய சாமியாரிடம் 2 போலி சாமியார்கள் கஞ்சா வாங்கிக் கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது... அதற்கு மறுத்ததால் கஞ்சா விற்க வந்த போலி சாமியார்கள் சாமியாரைக் கத்தியால் குத்தியுள்ளனர்... அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் லட்சுமி போலி சாமியார்களை கஞ்சா பொட்டலத்துடன் கைது செய்தார்... தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல் நிலையம் அருகிலேயே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் சுற்றி திரியும் சாமியார்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்