"ஒரு நாளைக்கு 10 லட்சம் வருமானம்.." போலீஸ்க்கு கசிந்த ரகசிய தகவல்.. கொத்தாக சிக்கிய லாட்டரி கும்பல்

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், திருவண்ணாமலை நகர ஏஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான குழு சோதனை நடத்தியது. இதில் 8 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணம், இரண்டு கார்கள், 3 லேப்டாப்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கும்பல் ஆன்லைன் லாட்டரி விற்பனை மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 7 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் சம்பாதித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்