சின்ன பிரச்சனையால் அநியாயமாக பறிபோன உயிர்... தவியாய் தவிக்கும் குடும்பம்

x

சின்ன பிரச்சனையால் அநியாயமாக பறிபோன உயிர்... தவியாய் தவிக்கும் குடும்பம்

வாகன மோதல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் காலணி விற்பனை கடை உரிமையாளர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சுரை அடுத்துள்ள அரியன்வால் பகுதியைச் சேர்ந்த சையது உசேன் காலணி விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். கடந்த திங்கட்கிழமை வியாபாரத்தை முடித்து விட்டு இரு சக்கரவாகனத்தில் வீடு திரும்பி இருக்கிறார். அப்போது எதிரே வந்த இரு சக்கரவாகனத்தில் வந்தவர்கள் சையது உசேன் மீது மோதியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.இதனால் ஆத்திரமடைந்த அந்த அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் தாக்கியதில் படுகாயம் அடைந்த சையது உசேன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சையது உசேன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் சையது உசேனை திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்திக் கொலை செய்தனரா என்ற கோணத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்