ரோட்டில் கொட்டிய ரூ.21 லட்சம்... கொத்தாக அள்ளி சென்ற ஆடுமேய்க்கும் பெண்

x

திருவையாறு அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறவிட்ட 21 லட்சம் பணத்தை மீட்ட போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். திருக்காட்டுப்பள்ளி தர்மம்மாள் நகரை சேர்ந்த விவசாயி ஒரத்தூர் காமராஜ் என்பவர், விவசாயத்தில் சிறுக, சிறுக சேர்த்த பணத்தை ஒரு கட்டைப்பையில் எடுத்துக்கொண்டு செல்லும்போது தவறி கீழே விழுந்து காணாமல் போனது. இதுகுறித்து அவர் மருவூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், ஆடுமேய்க்கும் பெண் அந்த பையை எடுத்து செல்வதை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்த போலீசார் அவரிடம் இருந்து பணத்தை மீட்டு காமராஜிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் வீடுகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்துமாறும், அதிகப்படியான பணத்தை பாதுகாப்பாக கையாளுமாறும், திருவையாறு டிஎஸ்பி அறமொழி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்