திருப்பூர் பிரபல தொழிலதிபரிடம் கிலோ கிலோவாக தங்க மாலை..? -திடீர் என்டரி கொடுத்த போலீஸ்

x

திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா. இவரிடம், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ தங்க மாலை இருப்பதாக கூறி ஒருவர் அறிமுகமாகியுள்ளார். 5 லட்சம் ரூபாய் முன்பணமாகவும், மாலையை விற்ற பின்னர் மீத பணத்தை தரலாம் என்றும் கூறியுள்ளார். ஆனால், சந்தேகமடைந்த ஜீவா, காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், தப்பியோட முயன்ற நபரை பிடித்தனர். விசாரணையில், அந்த நபர் திருச்சியை சேர்ந்த பாபு என்பதும், பல்வேறு கொள்ளை சம்பங்களில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த ராம்ஜி என்பவரின் குழுவில் இருந்த‌தும் தெரிய வந்த‌து. அந்த குழுவில் இருந்து பிரிந்து, பித்தளை நகைகளை தங்க முலாம் பூசி ஜீவாவிடம் விற்க முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாபுவை கைது செய்து, 2 கிலோ போலி தங்க மாலையை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்