`எலக்சன் முடிஞ்சதும் வந்துட்டோம்ல'.. ஸ்தம்பித்த ரயில் நிலையம்..

x

திருப்பூரில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள் தேர்தலுக்காக தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றிருந்தனர். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுள்ள நிலையில் அவர்கள் மீண்டும் திருப்பூர் திரும்பி வருகின்றனர். பாட்னா , பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து வந்த ரயில்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூர் திரும்பினர். ஒரே நேரத்தில் வந்திறங்கிய வட மாநில தொழிலாளர்களால் ரயில் நிலையம் கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்தது...


Next Story

மேலும் செய்திகள்