கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. ஆபத்து.. அபாயம் - சிக்கிய மக்கள்.. அதிர்ச்சி காட்சி

x

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட 3 ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் பகுதிகள் தனித்தீவாக மாறியுள்ளன. அத்தியாவசிய தேவைகள் மற்றும் அவசரகால சிகிச்சைக்கு கூட மக்கள் அங்கிருந்து வெளியேற முடியவில்லை... கூட்டாற்றின் குறுக்காக மலைவாழ் மக்கள் ஆபத்தான முறையில் பரிசல் மூலம் ஆற்றை கடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். உயர்மட்ட பால கோரிக்கை இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்