சிக்கி சீரழிந்த சிறுமி... குடும்பத்தார் தலையில் இடி - நடுநடுங்க வைத்த 3 சிறுவர்கள் அதிர்ந்து

x

உடுமலைப்பேட்டையில் பாட்டி வீட்டில் வசித்து வந்த அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, தன்னை 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், 3 சிறுவர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதானவர்கள், சிறுமியிடம் ஆசை வார்த்தைகூறி அவ்வப்போது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்