விரோதிகளால் நடந்த விபரீதம்.. பசு மாட்டின் தாடை கிழிந்ததால் அதிர்ச்சி | Thanthitv

x

வெங்கட சமுத்திரத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் குடும்பத்தினருடன் 5 பசு மாடுகளை வைத்து விவசாய தொழில் செய்து வரும் நிலையில் வழக்கம் போல் மேய்ச்சலுக்காக மாடுகளை அவிழ்த்து விட்டிருந்தார்... நீண்ட நேரமாகியும் மாடுகள் திரும்பாத நிலையில் கோவிந்த சாமி மாடுகளைத் தேடினார். அப்போது அருகாமையில் உள்ள நிலத்தில் அவரது பசு மாடு ஒன்று நாட்டு வெடிகுண்டை கடித்து தாடை கிழிந்து ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்று வட்டராப் பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாட சமூக விரோதிகள் தயாரிக்கும் நாட்டு வெடிகுண்டை அவ்வப்போது இதுபோன்று பசுமாடுகள் கடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்யும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்